SinhalaSriLankaEnglish (UK)

கண்ணோட்டம்

தொழில் புரிந்துகொண்டிருக்கும்போது நிகழ்கின்ற விபத்துக்களுக்கு முகம்கொடுக்கின்ற வேலையாட்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்காக 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட நிறுவனமாகும். சிவில் மற்றும் நீதவான் அதிகாரங்கள் உரித்தளிக்கப்பட்டுள்ள நட்டஈட்டு ஆணையாளரின் பிரதான பணி, 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தை (இறுதியாகத் திருத்தப்பட்டவாறு) நிருவகிப்பதாகும். கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் குறிக்கோள், தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது நிகழ்கின்ற விபத்துகளினால் அல்லது ஈடுபடுகின்ற தொழில் காரணமாக காயமடைகின்ற அல்லது அத்தகைய காயத்தினால் இறக்கின்ற வேலையாளர்களுக்கு அல்லது அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு நட்டஈட்டைச் செலுத்துவதற்கு தொழில்தருநரை ஊக்குவிப்பதாகும்.

தொலை நோக்கு

ஊறு அல்லது மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பணியாளர்களுக்கான நட்டஈட்டை தொழில்தருநரால் விரைவாகச் செலுத்துவிப்பதன்மூலம் பணியாளர் திருப்தியைத் தோற்றுவித்தல்.

செயற்பணி

தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் காயம், மரணம் அல்லது நோய் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், வேலையாட்கள் அல்லது அவர்களில் தங்கியிருப்போர்களுக்காக விதித்துரைக்கப்பட்ட நட்டஈட்டை தொழில்தருநரைச் செலுத்தச் செய்வதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதும், அறிவுறுத்தல்களை வழங்குவதும்.

முக்கிய தொடர்புகள்

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
www.labourmin.gov.lk
இலங்கை தொழில் திணைக்களம்
www.labourdept.gov.lk